×

நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில் வெற்று வார்த்தை தவிர பட்ஜெட் உரையில் ஏதும் இல்லை: ராகுல் காந்தி கருத்து

டெல்லி: நாடாளுமன்றத்தில் இன்று நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆற்றிய உரை பட்ஜெட் வரலாற்றில் நெடிய உரையாக அமைந்திருந்தாலும் வெற்று வார்த்தை தவிர பட்ஜெட் உரையில் ஏதும் இல்லை என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார். அனேகமாக அமைச்சர் நிர்மலாவின் உரைதான் பட்ஜெட் வரலாற்றில் நீண்டதாக இருக்கக்கூடும்; ஆனால் அதில் ஏதுமில்லை எனவும் கூறியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் நடப்பு நிதியாண்டுக்கான (2020-2021) மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையை இன்று தாக்கல் செய்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டு சுமார் இரண்டரை மணி நேரம் உரையாற்றினார். இந்நிலையில், இந்த நிதிநிலை அறிக்கை தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: ‘வேலை வாய்ப்பின்மை என்பது நாடு எதிர்நோக்கியுள்ள அதிமுக்கிய பிரச்சனையாக உள்ளது. இதை தீர்ப்பதற்கும் நமது இளைஞர்கள் வேலைவாய்ப்புகளை பெறுவதற்கும் இந்த பட்ஜெட்டில் எவ்வித ஆக்கப்பூர்வமான யோசனைகளையும் நான் பார்க்கவில்லை.

பட்ஜெட்டில் உள்ள அனைத்தும் அரசின் மனப்பாங்கை விவரிக்கின்றது. எல்லாமே வெறும் பேச்சுதான். ஆனால், எதுவுமே நடப்பதில்லை. நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து மத்திய நிதியமைச்சர் ஆற்றிய உரை பட்ஜெட் வரலாற்றில் மிக நீண்ட, நெடிய உரையாக அமைந்திருந்தாலும் எல்லாமே வெற்று வார்த்தைகள் தான்’ என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

Tags : Parliament ,Rahul Gandhi , Financial Statement, Blank Word, Budget Text, None, Rahul Gandhi, Opinion
× RELATED இந்த தேர்தல் சாதாரண தேர்தல் அல்ல; நமது...